வெண் நாவலமர்ந்துறை வேதியன்





திருச்சிற்றம்பலம்

மழையார் மிடறா மழுவா ளுடையாய் 
உழையார் கரவா உமையாள் கணவா 
விழவா ரும்வெண்நா வலின்மே வியஎம் 
அழகா எனும்ஆ யிழையாள் அவளே.

கொலையார் கரியின் உரிமூ டியனே 
மலையார் சிலையா வளைவித் தவனே 
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் 
காலா லுயிர்கா லனைவீ டுசெய்தாய்

பாலோ டுநெய் யாடிய பால்வணனே 
வேலா டுகையா யெம்வெணா வலுளாய் 
ஆலார் நிழலா யெனுமா யிழையே
சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்

உறநெற் றிவிழித் தஎம் உத் தமனே
விறன்மிக் ககரிக் கருள்செய் தவனே 
அறமிக் கதுவென் னுமென் ஆயிழையே.
செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்

அங்கட் கருணை பெரிதா யவனே 
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய் 
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே
குன்றே யமர்வாய் கொலையார் புலியின்

தன்தோ லுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளாய் 
நின்றா யருளா யெனும்நே ரிழையே.
மலையன் றெடுத்த அரக்கன் முடிதோள் 

தொலையவ் விரலூன் றியதூ மழுவா 
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் 
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே.
திருவார் தருநா ரணன்நான் முகனும் 

மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம் 
அரவா எனும்ஆ யிழையா ளவளே.
புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள் 

ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார் 
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய் 
அத்தா அருளாய் எனும் ஆயிழையே
வெண்நா வலமர்ந் துறைவே தியனைக்

கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன் 
பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார் 
விண்ணோ ரவரேத் தவிரும் புவரே.
நிலையா அருளா யெனுநே ரிழையே.

திருச்சிற்றம்பலம்

-திருஞானசம்பந்த சுவாமிகள்


0 comments:

Post a Comment